Jul 29, 2011

ஒரு புலியின் மரணம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் மட்டுமே வாழும் "சுமாத்ரா புலிகள்" பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். மிகவும் அழியும் தருவாயில் உள்ள இந்த புலிகள் எப்படி பாதிக்கப்பட்டு இறந்து போகின்றன என்பதற்கு ஆதாரமாக "Green Peace" ஒரு காணொளிக் காட்சியை வெளியிட்டுள்ளது.


வேட்டைக்காரர்களால் வைக்கப்பட்ட பொறியில் தன் காலை சிக்கவைத்து அங்கிருந்து தப்பமுடியாமல் ஒரு வாரகாலம் பசியில் போராடிய அந்த புலி செத்துப் போனது. Asia Pulp and Paper என்ற நிறுவனம் அதிக அளவில் காடுகளை அழித்து வருவதன் விளைவால் பல்வேறு உயரினங்களும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மனிதனின் அகோரப் பசிக்கு இரையாகும் இந்த புலி இதயத்தை கனக்க வைக்கிறது.



No comments:

Post a Comment