என்னுடைய இரண்டாவது நூல் "யாருக்கானது பூமி?" நேற்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
அரங்கு எண் 304-ல் கிடைக்கும்
நான் ஒரு பறவையை
எப்படி ரசித்தேன் என்பதை விடவும், அது என்ன பறவை, அந்த பறவைக்கும் சூழலுக்கும்
உள்ள தொடர்பு என்ன, அந்த பறவை இனம் பாதுகாப்பாக இருக்கிறதா? அவை அழிந்து
வருகிறதென்றால் அதற்கு என்ன காரணம் போன்ற செய்திகளே எனக்கு முக்கியமாக தெரிந்தது.
என்னுடைய பயணங்களும் தேடல்களும் நூல் வடிவில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
காட்டுயிர் பற்றிய என்னுடைய அனுபங்களையும், சிந்தனைகளையும், மனக் குமுறல்களையும்,
செயல்பாடுகளையும் வெளிப்படையாக எழுதி இருக்கிறேன். காட்டுயிர் பாதுகாப்பின்
முக்கியத்துவத்தை இந்த நூல் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என நம்புகிறேன்.
காட்டுயிர் பாதுகாப்புக்கு இந்த நூல் தூண்டுகோலாக இருக்கும் எனவும் நம்புகிறேன்.