புலிகளின் மரணம் காட்டின் மரணம்

ஒரு புலியின் மரணத்தை வெறும் செய்தியாக கடந்து போக முடியவில்லை. புலிகள் பல்லுயிர் சூழலின் முக்கிய அங்கம். பழனி மலைத் தொடரில் கிட்டத்தட்ட கடந்த ஐம்பது ஆண்டுகளாக புலிகள் இருந்ததாக முறையான பதிவுகள் இல்லை. புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. தற்போது இங்கே புலிகள் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான செய்தி. ஆனால் தொடர்ந்து இரண்டு முறை புலிகள் கொல்லப்பட்டுள்ளன. தற்போது புலிக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டார்கள். ஒரு வளர்ப்பு குதிரையை புலி அடித்துக் கொன்றதை தொடர்ந்து, அந்த குதிரையின் உடலில் விஷத்தை வைத்துவிட்டார்கள். மீண்டும் அந்த குதிரையை உண்ண வந்த புலி குதிரையை தின்று இறந்துவிட்டது. 





இது போல வளர்ப்பு விலங்குகள் காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டால் அதற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு கொடுக்கிறது. ஆனாலும் தொடர்ந்து இது போன்ற செயல்கள், காட்டுயிர்களின் அழிவுக்கு வழி வகுக்கின்றன. மேலும் காட்டுயிர் பாதுகாப்பு சட்டப்படி இது போன்று காட்டுயிர்களை விஷம் வைத்துக் கொன்றாலோ அல்லது வேட்டையாடினாலோ ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு. 

புலிகள் இல்லாத காடு அழிவை சந்திக்க நேரிடும். புலிகள் வாழ தகுதி இல்லாத காடுகள், அதை இரை விலங்குகளை இழந்திருக்கும். இரை விலங்குகளாலும் வாழ முடியாத காடு எப்படி காடாக இருக்க முடியும். எனவே அவை அழிவை நோக்கி செல்லும். இதன் தொடர்ச்சியாக ஆறுகள் வறண்டு போகும். ஆறுகள் காடுகளில் தானே உற்பத்தி ஆகிறது. காடுகளை பாதுகாப்பது வெறும் வனத் துறையின் வேலை அல்ல. அதற்க்கு போது மக்களின் ஒத்துழைப்பும் தேவை.கொடைக்கானல் அருகே தற்போது கொல்லப்பட்ட புலி, ஒரு மிகப்பெரிய இயற்கை அழிவு. தானாக அவை இடம்பெர்ய்ந்து மெல்ல மெல்ல இந்த பகுதியை தன் வாழிடமாக மாற்றிக் கொண்டிருக்கும். இப்போது புலியும் செத்துவிட்டது. அதன் முகவரியும் தொலைந்துவிட்டது. 


Post a Comment

1 Comments